Tuesday 14 June 2011

அஜித், விஜய் மற்றும் இதர காமடி பீசுகள் ??


அன்றே "உலகம் ஒரு நாடக மேடை அதில் நாமெல்லாம் ஒரு நடிகர்களே" என்றார் வில்லியம் ஷேக்ஸ்பியர். நாமெல்லாம் நாளும் பொழுதும் எடுப்பதோ ஆயிரம் கதாபாத்திரங்கள்,  அதுக்கு மேலாலும் தேவையா இந்த தமிழ் சினிமா? 

அன்பார்ந்த தல, தளபதி வால் ரசிகர்களே, தமிழ் சினிமா ஒரு சாக்கடை அதில் இருக்கின்ற குட்டைகள் தான் இந்த நடிகர்கள், இந்த குட்டைகள் செய்வதோ ஊரை பேக்காட்டுகின்ற தொழில், சாக்கடைக்கு வால் ஒன்று இருக்கும் என்றால் அது எவ்வாறு இருக்கும்? அதுவும் ஒரு சாக்கடையை விட கேவலமான நிலையில் தான் இருக்கும், அது போல தான் இந்த சாக்கடை தமிழ் சினிமா நடிகர்களுக்கு வால் பிடியாக இருந்து, நான் ஒரு தலை/தளபதி/ தறுதலை ரசிகன் எண்று தம்பட்டம் அடிப்பவர்கள் யாராக இருப்பார்கள்? 

நடிகர்களோ ஒரு பச்சோந்திகள், எப்போது எப்பிடி இருப்பார்கள் என்றே சொல்ல முடியாது, காரணம் சந்தர்ப்பதிற்கேற்றவாறு மாறும் மனோ பாவம் கொண்டவர்கள். கலைஞருக்கு விழா எடுத்த தமிழ் திரை உலகம் இன்று அம்மையாரை புகழ்ந்து தள்ளுகின்றது. முன்னர் காங்கிரசை எதிர்த்த அம்மையார் இப்போ பிரதமரிடம் நல்லெண்ண விஜயம் மேற்கொள்கிறாவாம். 

தமிழ் சினிமாவிற்கு வால்பிடிக்கும் உங்களால் தான், ஒரு ரூபாவுக்கு வரையறையற்ற அழைப்பு என்ற பகட்டு வசதியை வழங்கி விட்டு, பல கோடி ரூபாய் பெறுமதி வாய்ந்த 2G இணைப்புகளை, பல மில்லியன் செலவழித்து தன் விட்டில் கருணாநிதி அன் கம்பனி பூட்டிய அந்த கேவலம் கேட்ட நிலை தமிழ் நாட்டில் மிக துணிவான முறையில் உருவேடுத்திருக்கிறது. 

உங்களது தார்மீக கறுமங்களலான சூப்பர் ஸ்டாறு, தலை, தறுதலை, இளைய தலை வலி போன்றவர்களின் உடந்தையுடன் தமிழ் சினிமாவுக்கு வரி விலக்கலித்தாரம் அறல பேந்த கருணாநிதியார்! யாராச்சும் வால்பிடிகள் இதை பற்றி சிந்தித்தீர்க்கலா? மக்களுக்கு வரவேண்டிய வரி பணத்தை தான் விட்டில் பூட்டுவதற்காக போட்ட ஒரு தந்துரோபாய காய் நகர்த்தல் தான் இது! 

யார் இந்த நடிகர்கள்? இவர்கள் ஏன் நடிகிறார்கள் என்று வால்பிடிகள் சிந்தித்திருந்தால் இன்று ஆசிய துணை கண்ட நாடுகள் அரசியல், பொது நிர்வாகம் , உட்கட்டமைப்பு, தகவல் தொழில் நுட்பம் என்று ஒவ்வொரு துறையிலும் உலக வல்லரசுகளுக்கு சவால் விடும் அளவுக்கு முன்நேறி இருக்கும், 

இந்த பகட்டு வாழ்கை வாழும் கூட்டத்திற்கு வால் பிடிப்பதை விடுத்து,  அப்துல் கலாம் போன்ற அறிஞர்களுக்கு ஒரு ரசிகர் மன்றம் அமைத்து பாருங்கள், அப்போது புலப்படும் இந்த தமிழ் திரை உலகம் எந்த மூலைக்குள் என்று,  நடிப்பு திலகங்களை  தேர்தல் களங்களில் இருந்து துரத்தி விட்டு, அப்துல் கலாம் - பிரதமராகவும், அம்பானி சகோதரர்கள் - நிதி அமைச்சராகவும், சச்சின் டெண்டுல்கர் - விளையாட்டு துறை அமைச்சராகவும் நிறுத்துங்கள்/ ஆதரியுங்கள், பின்பு இந்திய ஒரு உலக அதிசயம் தான். 

4 comments:

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.
மேலும் விபரம் அறியவும்....
இந்த மோசடியை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தவும்.....
எனது வலைப்பக்கம் வாருங்கள்.ப்ளீஸ்...

Ashwin-WIN said...

மாப்பு உங்க ஆதங்கம் புரியுது ஆனா இந்த பயபுள்ளைங்க திருந்தாதுகள் மாப்பு.

vidivelli said...

nalla pathivu......
aathankam purikirathu.....
pathivirku vaalththukkal...


namma pakkamum kaaththirukku!!!!

Mohamed Faaique said...

இவனுங்க திருந்த கூடாது’னு ஒரு கூட்டமே முயற்சி பண்ணிடு இருக்கே!!!

Post a Comment

நிருவின் - நிஜங்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...