Friday 17 December 2010

திசைமாறும் யாழ்ப்பாணம்

உலகிலே தமிழ் கலாச்சாரங்கள், தமிழ் பாரம்பரியங்கள்  மற்றும் இந்து  பண்பாட்டு விழுமியங்களை பறை சாற்றுகின்ற பிரதேசம் தான் யாழ் குடாநாடு. யாழ் குடா நாடானது பல வரலாற்று சுவடுகள் மற்றும் தனக்கென தனிதுவமிக்க வரலாற்று இலக்கியங்களை கொண்ட  ஒரு தனிப் பெரும் தமிழர்களின் தேசம். இது கல்வி மான்களையும் சகலகலா வித்தகர்களையும் உருவாக்குகின்ற ஒரு தேசம், அணைத்து சமூகங்களுக்கும் மத்தியில் இன்று தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்பதற்கு ஒரு அடித்தளமாகவும், பெண் இலக்கணத்திற்கு ஒரு முன்மாதிரியாக விளங்கும் தேசம் இது. 

ஆனால் தற்போது இருக்கூடிய கொலை , கொள்ளை , களவு, சூதாட்டம், அடாவடித்தனம், அட்டூழியம் அத்தனையும் நிறைத்து மலிந்து   காணப்படும் இடமாக உருவெடுத்து வருகின்றது. யாழ் குடாநாட்டிற்கான  A9 வீதி திறக்கப்படத்தை தொடர்த்து இவை அத்தனையும் அரங்கேறி வருகின்றன. 
A9 வீதி திறக்கப்பட முன்னர் யாழ் குடநாட்டிற்கு வரும் வெளிநபர்களின் எண்ணிக்கை மிக சொற்பமாகவே இருந்தது அதிலும் குறிப்பாக மேலைத்தேய கலச்சராத்தில் குடாநாட்டிற்குள் வரும்  கோப்பை கழுவிநிகளின் எண்ணிக்கை மிக மிக அரிதாகவே இருத்தது, அதனால் யாழ் மக்களது கலாச்சாரமோ வாழ்க்கை முறைமையோ மாறி இருக்கவில்லை, 

இதேவேளை மக்களது நிதிகள் அனைத்தும் வங்கிகளின் வைப்புகளை நோக்கி நகர்ந்திருந்தன இதனால் தேவையற்ற பொழுதுபோக்கு ஊடகங்கள் மற்றும் தொலைபேசி பாவை மட்டுப்படுதபட்ட அளவில் இருந்தது இதனால் யாழ் குடாநாட்டு மாணவர்களது சிந்தனை, செயல் அனைத்தும் கல்வியிலும், கல்விசார்  இணைப்பாடவிதான செயற்பாடுகளையும் நோக்கி நகர்ந்தன.

A9 வீதி திறக்கப்பட்டதன் பின்னர் இதுதான் தற்கால நாகரீகம் என்று பிதட்டிக் கொண்டு நாட்டுக்குள் வரும்  வெளிநாடு மோப்பநாய்களினாளும் (இந்நாட்டை சேர்ந்த கோப்பை கழுவிகள்)  யாழ்  நோக்கி படை எடுத்துள்ள நிறுவங்களின்  சந்தைப்படுத்தல் வெளியீடுகளாலும் பாரம்பரிய காலாசார விழுமியங்களும் , மக்களது வாழ்கை முறையையும் திசை மாறி செல்கின்றது. இதன்பிரதி பலிப்பு பாடசாலை மாணவர் முதல் பல்கலை கழக மாணவர்களில் இருந்து பெண்கள் வரை எவரையும் விட்டு வைக்கவில்லை.

 ஒரு ஆசிரியரை கண்டால் மாணவர்கள் பயந்த காலம் பொய் , மாணவர்களை கண்டால் ஆசிரியர் பயப்படும் நிலை உருவெடுத்துள்ளது, பாடசாலைகளிலே ஒழுக்க கட்டுப்பாடுகள் கட்டவுல்த்து விடப்பட்டிருக்கின்றது, இவை அனைத்திற்கும் "மது அருந்துவது தான் நாகரீகம்" என்ற கோப்பை கழுவிநிகளது நாகரிக வழிகாட்டலும் அதனுடன் கூடிய நாணய மாற்றமும்.

இதற்கு அப்பால் நாகரீக மது பிரியர்களிடம் மயங்கும் மாதுக்கள் இதன் விளைவு யாழ் போதன வைத்திய சாலையில் தெரிகிறது. இந்த கொடிய நாகரிக நோயின் நோக்கேல்லை பல்கலை கழக மாணவிகளிடம் இருந்து தற்போது பாடசாலை மாணவிகள் வரை பரந்திருப்பதை அண்மையில் வெளியான செய்திகள் உணர்த்து கின்றன. 

இவை எல்லாம் ஒரு புறம் இருக்க, மறு முனையிலே அதிகரிந்து வரும் வேலை வெட்டியில்லா இளம் சமுதாயங்களின் அடாவடித்தனமும் கொள்ளைகளும். வாள்கள் மற்றும் இதர கூரிய ஆயுதங்கள் மூலம் பொது மக்களை மிரட்டியும் கொலைசெய்தும் கொள்ளை கும்பல்கள்  தமது கைவரிசையை காட்டி வருகின்றனர்  , இது  தற்போது யாழ் குடா நாட்டை பெரும் பீதியில் ஆழ்த்தி இருக்கின்றது. ஆனால் கடமை உணர்ச்சி கூடிய காவல் துறையினரால் வீதிகளிலே  நின்று பிழை பிடித்து பணம் பறிப்பதை விட வேறு ஏது முடியும் அவர்களால். 

இந்நிலை தொடருமாயின் இன்னும் சில வருடங்களில் ஆசியாவின் அதிசயமாக மாற இருக்கும் யாழ்பாணம், சோமாலியாவாகதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை!





Wednesday 15 December 2010

FACEBOOK ன் இணை ஸ்தாபகர் MARK ZUCKERBERG "TIME's 2010" ஆக தெரிவு

 FACEBOOKன் இணை ஸ்தாபகரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான Mark Zuckerberg  இவ்வாண்டிட்கன TIME சஞ்சிகையின் உடைய நபராக தெரிவு செய்யப் பட்டுள்ளார். (TIME's 2010 Person of the Year 2010)
2010ம் ஆண்டிற்கான பிரபல நபரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் விக்கிலீக்ஸின் ஜூலியன் அசேஞ்சே முதலில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்த நிலையிலேயே, அனைவரினது எதிர்ப்பார்ப்பினையும் முறியடித்து ஷூக்கர்பேர்க்கினை டைம் தெரிவு செய்துள்ளது என டைம் சஞ்சிகையினுடைய பிரதம ஆசிரியர் Rick Stengel இந்த அறிவித்தலை  இன்று (15.12.2010) வெளியிட்டுள்ளார். இத் தெரிவானது வெறும் வாக்குகளை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாது பல்வேறு விடயங்களை கருத்தில் கொண்டே மேற்கொள்ளப்படுகின்றது.
    26 வயதான  ஷூக்கர் பேர்க் உலகிலே அரை பில்லியன்க்கு மேற்பட்டோரை ஒரு சமுக வலையமைப்பின்  மூலம் ஒன்றினைதிருக்கின்ற பெருமைக் குரியவர். இந்த சமூக வலையமைப்பானது உலகிலே பல மாற்றங்களுக்கும் பல வலையமைப்பு விருத்திகளுக்கும் ஒரு அடித்தளமாக மாறி இருக்கின்றது , அதற்கு அப்பால் இது வர்த்தகதுறையிலே ஒரு ஊடகமாகவும், மக்களது சிந்தனையாற்றல்கள் மற்றும் வெளிப்பாடுகளை,   தகவல் புரட்சியூட அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி இட்டு செல்வதற்க்காண ஒரு தகவல் மையமாக அமைந்திருக்கின்றது.
இதற்கு முன்னர் 1952ம் ஆண்டு Elizabeth மகராணி மிக குறைந்த வயதில் (26 வயது ) இந்த விருதினை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சாமாகும்.

Sunday 12 December 2010

Wikileaksம் அரங்கேறும் நாடகங்களும்

உலகிலே இடம் பெற்று வருகின்ற ஆராயகங்கள்  மற்றும் திரைக்கு பின்னான  இராயாங்க இரகசியங்களை தங்களது திறமையை பயன்படுத்தி வலையமைப்புகளை கொள்ளை இடுதல் மற்றும் இதர தகவல் கசிவுகள்   மூலம் உலகிற்கு எடுத்து வியம்புகின்ற இணைய தளம் தான் விக்கிலீக்ஸ்.(www.wikileaks.org) இவர்கள் 2006ம் ஆண்டு ஆப்கானிஷ்தானுக்கு எதிராக அமெரிக்க போர் தொடுத்ததன் பின்னணியில் தொடர்புபட்டிருக்கும் இருக்கும் ஆவணங்கள் முதல் அனைத்துலக நாடுகளில் இடம் பெற்றுக்கொண்டிருக்கும் திரைக்கு பின்னான அரசியலை எடுத்தியம்பி வருகின்றனர். இது இவ்வாறிருக்க சர்வதேச குற்ற புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வந்த Australia பிரயையான  அதன் நிறுவுனர் Michel Assange கடந்த 07 திகதி லண்டன்மா நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரின் கைதை தொடர்ந்து பல நாடகங்கள் அரங்கேறிய  வண்ணமுள்ளன  ஆறுமாதங்களுக்கு முன்னர் சீனா விக்கிலீக்ஸ்சை தடை செய்ததை தொடர்ந்து தற்போது விக்கிலீக்ஸ்ன் வெளிஜிடுகளால் பாதிப்புற்ற பல உலக வல்லரசுகளான அமெரிக்க, ஐக்கிய ராட்சியம், ஸ்வீடன் உட்பட இதர நாடுகள் அதனை தடை செய்தவண்ணமுள்ளன.
 "சோமியன் குடும்மி சும்மாவா ஆடும்", உலக வல்லரசுகளுக்கு வாழ் பிடிக்கும் நோக்கோடும் விக்கிலீக்ஸ் செயற்பாடுகளை ஸ்தம்பிதம்  அடைய செய்யும் பொருட்டும், விக்கிலீக்ஸ்ன் வங்கி கணக்கை பராமரித்து வந்த swesh bank அதன் கணக்குகளை மூடியதுடன் வங்கி நிலுவைளையும் முடக்கியது. 
விக்கிலீக்ஸ் ஆனது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு. இதன் செயற்பாடுகளுக்கு தேவையான நிதி மூலங்கள் அனைத்தும் நன்கொடை மூலம் பெறபட்டு வந்தன, இவை அனைத்தும் மேற்குறித்த வங்கி கணக்கு மூலமே பராமரிக்க பட்டுவந்தமை குறிப்பிடதக்கது .
 இதேவேளை ஒருந்தன் ஆடுற மாதிரி நாமளும் ஆடுவம், ஒருந்தன் எப்ப ஆடுவான் என்டு பாத்திட்டிருந்த கூட்டங்கள் சில தாமும் தங்கள் பங்கிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிந்தனையில், உலகில பிரபலமாக இருக்கின்ற தேடுதல் தளங்களான கூகிள் மற்றும் யாஹூ என்பன தங்களும் விக்கிலீக்ஸ்ன் தேடுதல் இணைப்புகளை தடை செய்தன. 
அது மட்டுமா ?  உலகில அதிகளவான தகவல்களை   சேமிக்க கூடிய வகையில் பல இயங்குதளங்களோடு இயங்கி கொண்டிருக்கும் இணையதள இட (hosting) வழங்குனரும் விக்கிலீக்ஸ் இணைய தளத்திற்கு இடமைப்பு வழங்கியதுமான  அமேசன் தான் வழங்கிய இட பரப்பை முட்டக்கி கொண்டது, விக்கிலீக்ஸ் தற்போது www.wikileaks.ch எனும் முகவரியில் இயங்கி கொண்டிருகின்றது .














இதன் பிரதிபலிப்பாக assange சகபாடிகள் ஆன்மாதேய (Anonymous) நபர்கள் என்ற பெயரில் தங்களது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். அந்த வருசையில் amezen.com  இணைய செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தும் வகையில் 3 மணி நேரம் அதனை ஆனாமதேய நபர்கள் தம் கட்டுப்பாட்டின் கீழ் முடக்கி வைத்திருந்தனர்.
இதேவேளை உலகின் ஆன்லைன் பணபரிமாற்ற தளங்களான paypal உள்ளிட்டவை விக்கிலீக்ஸ் உடனான கணக்குகளை செயல் இழக்க செய்துள்ளனர். மறு முனையிலே சமுக வலையமைப்புகலான facebook மற்றும் twitter என்பன இது தொடர்பாக தாம் எந்த ஒரு முடிவும் இதுவரை எடுக்க வில்லை என தமது செய்தி குறிப்புகளில் வெளியிட்டுள்ளன, இவை அத்தனையும் உலக வல்லரசுகளின் வழிகாட்டல் அரங்கமே !
  Assange ஆள் வெளியிடும் நோக்கோடு வைத்திருக்கப் பட்டிருந்த முக்கியமான பல தகவல் கோவைகள் இணையதளங்களிலே தனிப்பட்ட பாதுகாப்பு குறியீட்டுடன் (Private Key) பதிவேற்றப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்பவர்  தனது  மினஞ்சல் முகவரியை பதிவதன் ஊடக தனிப்பட்ட கு
றியீட்டினால் பிரிக்கப்படாத கோவையாக தரவிறக்கம் செய்ய முடியும் அனால் ஆனாமதேய நபர்கள் தனிப்பட்ட குறியீட்டினை வெளியிடும் வரை எவரும் அதன் உள்ளடக்கங்களை பார்வையிட முடியாது. 
"வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்" என்பதற்கமைய Assange விடுவிக்காத பட்சத்தில் அண்ணாமதேய நபர்கள் தாம் இந்த தனிப்பட்ட இரகசிய குரியீட்டினை பதிவு செய்யப்பட்ட மினஞ்சல்களுக்கு வெளியிடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்!
எது எவ்வாறிருப்பினும் பதிவேற்றப்பட்டுள்ள தனிப்பட்ட இரகசிய குறியீட்டுடன் கூடிய கோவைகள் பிரித்தெடுக்கும் முயற்சியில் மென்பொருள் பொறியியல் ஆளர்கள் மற்றும் தகவல் தொழில் நுட்ப விற்பனர்கள் இறங்கி இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை!


நிருவின் - நிஜங்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...