Saturday 13 August 2011

இந்தியாவின் படுதோல்விகள் உணர்த்துவதென்ன?

உலகக்கின்ன கிரிக்கெட் ஆனது இந்த வருட ஆரம்பத்திலே அனைவரையும் தன் பக்கம் ஈர்த்திருந்ததை யாராலும் மறக்க முடியாது. அதை விட இந்திய அணி கிண்ணத்தை கைப்பற்றிய பின் ரசிகர்கள் என்ற பெயரில் பல கோமாளிகள் விட்ட அறிக்கைகளை போன்று யாராலும் அறிக்கை விடவும் முடியாது.

மாயயால வித்தைகள், அக்கினி ஓமம் என பல சூத்திரங்களை செய்து பத்தாவது உலக கிண்ணத்தை சுவீகரித்ததன் பின் இந்தியாவின் தலைக்கனம் உச்சவரம்பை மீறி இருந்தது. சர்வதேச கிரிக்கெட் சபையை தன் வசம் வைத்திருக்கும் இறுமாப்பில் பல புது விதிகளை இந்திய அணிக்கு சாதகமான முறையில் சர்வதேச கிரிக்கெட்டில் புகுத்தியதுடன், சில பாதகமான விதிகளை செயலிழக்கவும் செய்தது. 

டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தாங்கள் தான் யாம்பவான்கள் என்று இறுமாப்பு காட்டிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியை பின் தள்ளி விட்டு முதல் இடத்தை பிடித்த இந்திய அணிக்கு, முதல் இடத்தை பிடித்து ஒரு வருடம் கூட முடிவுராத நிலையில் வந்திருக்கின்றது ஆப்பு இங்கிலாந்திடம் இருந்து. (வட போப்போதே)

"தன்வினை தன்னை சுடும் ஓட்டப்பம் வீட்டை சுடும்" என்னு நம்ம பளசுகள் சும்மாவ சொல்லிச்சு, இந்திய கிரிக்கெட் சபையின் எதிர்ப்பால் கைவிடப்பட்ட அல்லது நீக்கப்பட்ட மூன்றாவது நடுவரின் மீள் பரிசோதனை முறை, இங்கிலாந்தில் இந்திய அணிக்கே ஆப்பானதுடன் இங்கிலாந்து வீரர் "போர்ட் "  கட்றிக் சாதனை நிகழ்த்தவும் ஏதுவாக அமைந்தது. 

அப்புறம் ராசிக்கார பயபுள்ள தோனிக்கு இப்போ அட்டமத்தில சனியன் போல, பாவம் இங்கிலாந்துடனான் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆடுகளத்தை வந்து பார்ப்பது போவதுமாக இருந்தார். இந்த பயபிள்ளைகள் தான் செய்யுறாங்கலில்லை என்னு சேவாக்கை கொன்னு வந்தாங்க அணிக்குள்ள, அவரோ அதிரடி வீரர் ஆச்சே, அதிரடியா வந்தாறு - அதிரடியாவே பவலியனுக்கு போய்ட்டாரு இரண்டு இன்னிங்சும். 

அதுக்கப்புறம்,வீராப்பு பேசுற ஸ்ரீசாந்த எறியிறான், எறியிறான் எவ்வளவு முடியுமோ அவளவுக்கு எறிஞ்சான், அனா இந்த வெள்ளகார பசங்க அதில என்னமோ மாதிரி எல்லாம் வித்தை காட்டியிருந்தாங்க! (பாவம் அழுதிருப்பான் ஹர்பஜன் சிங்கும் இல்லை துடைகிறதுக்கு)

இன்று வரை இந்திய அணி இரண்டு போட்டிகளில் தோல்வியை கண்டிருப்பதுடன், மூன்றாவது போட்டியில் படுதோல்வியை தோல்வியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது, இந்த தொடரிலே இந்திய அணி ஐந்து போட்டிகளிலும் தோல்வியுறுவதற்கான வாய்ப்புக்களே அதிகமுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்ட வண்ணமுள்ளர்கள். 

இந்தியாவின் இத்தகைய படுதொல்விக்கு பலகாரணங்கள் முன்வைக்கப்பட்ட வண்ணமுள்ளன.
  • உலக கிண்ணத்தை வென்ற இறுமாப்பு 
  • இங்கிலாந்து வீரர்களின் திறமையான சகலதுறை ஆட்டம்
  • IPL பண மோகம் 
  • IPL மற்றும் T20 போட்டிகளில் உள்ள கவனம் 
  • டெஸ்ட் போட்டிகளுக்கு பொருத்தமற்ற பந்து விச்சாளர்கள்
  • வயது வந்த வீரர்கள் அணியில் அதிகம் உள்ளமை.
  • இங்கிலாந்தில் இந்திய பூசாரிகளோ, மாயயால வித்தைக்காரர்காலாலோ வித்தை எதுவும் செய்ய முடியாமை!
எவ்வாறு இந்திய அணி படு தோல்வி அடைந்தாலும், இந்திய ரசிகர்களிட மீசையில மண் ஓட்டாதாம்.  (வேற என்னத்தை சொல்லுவாங்க: ஷாகீர் கான் இல்லாததால தான் இந்த தோல்விகள் எல்லாம் என்னுவாங்க போல) 


இவ்வளவு காலமும் டோனிக்கு பூ போட்டு கும்பிட்ட இந்திய ரசிகர் கூட்டம், இனி வரும் காலங்களின் தோனியின் உருவப்பொம்மை எரிக்கும் என்பதில் ஐயமில்லை!


7 comments:

Unknown said...

அதிக எழுத்துப்பிழைகள் நண்பரே !!உடம்புக்கு ஆகாது :)

Ashwin-WIN said...

தோனிக்கு எங்கயோ கண்ணனுக்கு தெரியாத இடத்துல மச்சம் இருக்கு போல... தூக்குற நேரத்துலயும் ரன் அடிச்சுட்டான் பயபுள்ள....

anuthinan said...

இந்திய ரசிகர்கள் எப்பவுமே இப்படித்தானே!!!

Mohamed Faaique said...

///இவ்வளவு காலமும் டோனிக்கு பூ போட்டு கும்பிட்ட இந்திய ரசிகர் கூட்டம், இனி வரும் காலங்களின் தோனியின் உருவப்பொம்மை எரிக்கும் என்பதில் ஐயமில்லை!////

நிச்சயமாக....

ARV Loshan said...

// மாயயால வித்தைகள், அக்கினி ஓமம் என பல சூத்திரங்களை செய்து பத்தாவது உலக கிண்ணத்தை சுவீகரித்ததன் பின் இந்தியாவின் தலைக்கனம் உச்சவரம்பை மீறி இருந்தது. சர்வதேச கிரிக்கெட் சபையை தன் வசம் வைத்திருக்கும் இறுமாப்பில் பல புது விதிகளை இந்திய அணிக்கு சாதகமான முறையில் சர்வதேச கிரிக்கெட்டில் புகுத்தியதுடன், சில பாதகமான விதிகளை செயலிழக்கவும் செய்தது.

டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தாங்கள் தான் யாம்பவான்கள் என்று இறுமாப்பு காட்டிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியை பின் தள்ளி விட்டு முதல் இடத்தை பிடித்த இந்திய அணிக்கு, முதல் இடத்தை பிடித்து ஒரு வருடம் கூட முடிவுராத நிலையில் வந்திருக்கின்றது ஆப்பு இங்கிலாந்திடம் இருந்து. (வட போப்போதே)//

ஹீ ஹீ :) ரசித்தேன் சகோ..

நீங்கள் இந்தியாவின் தோல்விகளுக்குக் கண்டறிந்த காரணங்களும் கலக்கல் நிரூ..

இவ்வளவு காலமும் டோனிக்கு பூ போட்டு கும்பிட்ட இந்திய ரசிகர் கூட்டம், இனி வரும் காலங்களின் தோனியின் உருவப்பொம்மை எரிக்கும் என்பதில் ஐயமில்லை!
//
இது தான் பொயின்ட் ;)


*ஆவலுடன் அவசரமா எழுதினதோ? நிறையவே எழுத்துப்பிழைகள் சகோ..

Anonymous said...

// மாயயால வித்தைகள், அக்கினி ஓமம் என பல சூத்திரங்களை செய்து பத்தாவது உலக கிண்ணத்தை சுவீகரித்ததன் பின்// ஓ இலங்கை இறுதி போட்டியில் தோற்றத்துக்கு காரணம் இது தானோ... ))

அன்புடன் நான் said...

நல்ல படைப்புதான்... ஏற்கிறேன் உங்க கோபம் நேர்மையானது நீங்க சொன்ன காரணமும் ஏற்புடையதுதான்...... ஆனா
///ரசிகர்கள் என்ற பெயரில் பல கோமாளிகள் விட்ட அறிக்கைகளை போன்று ///
இது சரியில்லாதா பேச்சு.... திருத்திக்கொள்ளுங்கள்.

Post a Comment

நிருவின் - நிஜங்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...