Thursday 10 February 2011

விஷமிகளின் அரங்காகும் FACEBOOK?

தற்கால தகவல் தொழில் நுட்பயுகமானது பல்வேறுபட்ட வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தினாலும், மறு முனையில் அது பல்வேறுபட்ட எதிர் விளைவுகளையும் ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பாக இதன் எதிர் விளைவுகள் வளர்த்து வரும் பாடசாலை மாணவர் முதல் பல்கலை கழக மாணவர் வரை பரந்திருக்கின்றது.  இதற்கு அதிகரித்துவரும் சமூக வலையமைப்புக்கலான facebook  மற்றும் twitter போன்ற இதர வலையமைப்புகளின் பாவனையே அடித்தளம் இடுகின்றது .

facebook. twitter  போன்றவற்றின் பயன்பாடுகளை அறியாத இளம் சமுகம், இவற்றை ஒரு வகை கீழ்த்தனமான மனிதாபிமானமற்ற செயற்பாடுகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஒரு அநாமதேய கணக்கை திறத்து அதில் தனக்கு வேண்டபடாத ஒருவரைப்பற்றியோ, ஒரு சமுகத்தை பற்றியோ சமூக அங்கீகார மற்ற முறையில் எதையாவது வெளிப்படுத்தி விட்டு தான் ஓர் சைபர் வார் செய்து உலக சாதனை படைத்தவர் போல் பாவை செய்வது ஒரு நகைசுவைகுரிய விடயம். 

facebook போன்ற இதர சமுக வலையமைப்புக்கள் ஆனவை தனிபட்ட நபர்கள் மற்றும் சமூகங்களின் நீண்டகால நீரோட்டத்தில் நிகழும் கருத்துக்கையும், தங்கள் நாளாந்த வாழ்க்கையில் இடம் பெறுகின்ற நகைசுவை மிகு ஆக்கங்களையும் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு தளமே தவிர, ஒரு தனிப்பட்ட நபரையோ அல்லது ஒரு சமூகத்தையோ கலங்க படுத்துவதற்கான இடங்கள் அல்ல இவைகள்,.

 இவாறான கைங்கரியங்கள் ஆனவை தற்போது ஒரு சில பல்கலை கழக மாணவர்களிடம் ஊடுறுத்திருப்பது ஓட்டு மொத்த பல்கலைக்கழக மாணவர்களையும் ஒரு சாக்கடைக்குள் இழுத்து  செல்லும் செயற்பாடாகும். இதற்கு அண்மையில் மைந்தனால் வெளியிடப்பட்ட "பல்கலைக்கழக மாணவி மீது பேஸ்புக் சைபர் கிரைம்" என்ற தலைப்பிலான ஆக்கம்  நல்லதொரு உதாரணம்இது எதிகாலத்தில் தனிப்பட்ட நபர்களின் வாழ்கையை கூட சீரழிக்க வல்லது.

மைந்தன் வெளிபடுத்திய நிகழ்வில் தொடர்புபடும் அந்த அநாமதேய நபரானவர், குறித்த பல்கலை கழகத்தை சேர்ந்த ஒருவராக இருப்பதுடன், அவர் ஒரு ஆங்கில அறிவில்லாத நபர் போல் தன்னை பாவனை செய்வதோடு, தனது மொழி நடையை வெளிப்படுத்த முடியாது, கொச்ச தமிழிலே தனது விசம தனமான கருத்துகளை வெளிப்பட்டுத்தி வருகிறார். குறித்த நபரானவர் நிச்சயமாக சகோதரத்துவம் அறியாத ஒரு மன நோயாளி என்பது நிச்சயம். இவர் காதலால் விரக்தி அடைத்த நபராக இருப்பதற்கான சாத்தியங்கள் நிறையவே உள்ளன. அவர் மற்றவர்கள் தன்னை இனம் கண்டு கொள்ள முடியாதிருக்க,குழப்பமிகு வசனங்களை அவர் அங்கு பயன்படுத்தி இருக்கிறார்.

முன்பு பல்கலை கழகங்களில் பகிடிவதை என்ற கொடிய நோய்க்கு பயந்த காலம் போய், இப்போது இவ்வாறான விசம தனமான செயற்பாடுகளுக்கு அஞ்சும் நிலை உருவேடுத்துள்ளது. இது குறிப்பாக மாணவிகள் மத்தியில் பெரும் பீதியை உருவாக்கி உள்ளது. இவ்வாறன செயற்பாடுகள் குறித்த பல்கலைகழகத்தின் பெயருக்கு பங்கம் விளைவிப்பது மட்டுமல்லாது, குறித்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் ஏனைய மாணவர்களது  செயற்பாடுகளுக்கும் கரும் புள்ளி வைக்கும் ஒரு நாசகார வேலையாகும்!

 இந்த நாசகாரி தான் அனைத்தையும் பாதுகாப்பான முறையில் செய்வதாக என்னலாம் ஆனால் அவரால் குறித்த அநாமதேய கணக்கின் infoவை மட்டும் தான் மறைக்க முடிந்துள்ளமை அண்மையில் மேற்கொள்ளப்பட்ட புலன் ஆய்வின் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் இங்கு சில தடயங்களையும் அவருக்கு தெரியாமல் (தகவல் பாது காப்பு தொடப்பன அறிவு விசமிக்கு இல்லை என்பது உறுதி) விட்டு சென்றிருக்கின்றார். இந்த தடயங்களை புலனாய்வு செய்யும் பணியை நண்பர்கள் சிலர் முடுக்கி விட்டிருக்கிறார்கள். இவர் பயன்படுத்தும் இணையவசதியினது IP Address, Host Name, ISP என்பன இனம் கானப்படுள்ளன. இன்னும் சில இது தொடர்பான தகவல்கள் பெறப்படும் இடத்து குறித்த விசமி உறுதி செய்யப்படுவார். 

இத்த நாசகாரியை இனம் காணும் படலம் தற்போது ஒரு வட்டத்திற்குள் முடக்கப்பட்டிருக்கிறது. இந்த நாசகார நபரின் செயட்பாடுகலால் பாதிப்புற்ற மாணவர்களில் ஒருவர் சட்ட உதவியை நாடும் இடத்து, கணணியின் பிழையான பயன்பாடு சட்ட வரைவுகளுக்கமைய இவ்வாறான நாசகரமான செயகல்கள் கொலை குற்றங்களுக்கு நிகராக மதிக்கப்படும். அத்தோடு குறித்த விசமி தனது பல்கலை கழக கல்வியை துறக்க நேரிடுவதுடன் அவரது எதிகால தொழில் வாய்ப்புக்கள் பாதிப்புறும். இவ்வாறன விசமிகள் இருக்கும் வரை தமிழ் சமுகம் எவ்வாறு வளம்பெறும் ?

இவாறான அநாமதேய facebook கணக்குகளில் சித்தரிக்கப்படும் சமூக அங்கீகார மற்ற செயல்களை கண்டும் காணாதது போல் இருக்காது, இவ்வாறான அண்ணாமதேய கணக்குகள் தொடர்பாக facebookல் காணப்படும் report என்ற option மூலம் இவ்வாறான செயல்களை ஒழித்து கட்டுவதன் ஊடாக facebookஐ ஒரு ஆரோக்கியமான சமூக வலையமைப்பாக தமிழ் சமூகத்தின் மத்தியில் முட்கொணர முடியும்.


4 comments:

Unknown said...

முதலில் நன்றி என் இணைப்பை கொடுத்ததற்கு.
இவர்களுக்கு என்ன தண்டனை வழங்குவது என்பது தான் பரிசீலனையில் உள்ளது.
பரதேசி பயலுகள்

Ashwin-WIN said...

நல்லதொரு அலசல்..
அந்த நாறப்பயல் கிடைச்சாநெண்டால் எனக்கும் சொல்லுங்கோ வாறன்.

நிருஜன் said...

பாதிக்கபட்ட சில நண்பர்கள் சட்ட உதவியை நாடவுள்ளனர், இதன் மூலம் குறித்த விசமி மிக விரைவில் ஆதாரத்துடன் சமூகத்தின் முன் நிறுத்தப்படுவார்!

மா.குருபரன் said...

முதல்ல பேஸ்புக்கிற்கு சம்மந்தப்பட்ட தரவுகளை இணைத்து பிரச்சினையை அனுப்புங்கள். சம்மந்தப்பட்ட விஷமியின் தரவுகள் கிடைத்தால் புகைப்படத்துடன் வெளியிடவும்.....

Post a Comment

நிருவின் - நிஜங்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...