Friday, 28 January 2011

ICC CRICKET WORLD CUP - திருப்பு முனைகள்

அண்மைக்காலமாக பத்தாவது உலகக்கின்ன  கிரிக்கெட்  ஆனது அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கின்றது. இந்த தருணத்திலே அதன் வரலாற்று சுவடுகளை எடுத்தியம்ப வேண்டியது இக்காலத்தின் தேவை. பத்தாவது உலகக்கின்ன  கிரிக்கெட்  சமரானது எதிவரும் மாசி மாதம் 19ம் திகதி ஆசிய துணைக்கண்ட நாடுகளான இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேசில் இடம் பெற இருக்கின்றமை பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. 
குறிப்பாக  இலங்கை அணி கிரிக்கெட்டின் முடிசூடா மன்னர்களாக திகழும் ஆஸ்திரேலிய அணியினரை அவர்களது மண்ணில் வைத்து ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் வெற்றி கொண்டிருப்பதுடன் மத்தியுவ்ஸ்ன் சகலதுறை ஆட்டம் எதிர் அணிகளுக்கு பெரும் திண்டாட்டத்தை ஏட்படுத்தி வருகின்றது .
  இந்திய அணியானது தென்னாபிரிக்க அணியுடனான ஒருநாள் தொடரில் இளம் வீரர்களை கொண்டு போராடி இருக்கின்றது. அதிலும் யூசுப் பதானின் ஆட்டம் இந்திய அணிக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்திருக்கின்றது. இதே வேளை பங்களாதேஷ் அணியின் அண்மை கால பெறுபேறுகள் கிரிக்கெட் அரங்கில் புதியதோர் எதிர் பார்ப்பை தொற்று வித்திருக்கிறது .  
பல  உலககின்ன இறுதிப்போட்டிகளில் கோட்டை விட்ட இங்கிலாந்து அணியானது Ashes தொடரை வென்று தனது பலத்தை வெளிபடுத்தி இருக்கின்ற இந்த தருணத்திலே நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துடநானா முதல் மூன்று போட்டிகளையும் வென்று கிரிக்கெட் அரங்கில் புதிய தொரு  மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
எது  எவ்வாறு இருப்பினும், கடந்தகால பாதைகளை திரும்பி பார்க்குமிடத்து  உலககின்ன கிரிக்கெட் ஆனது 35 ஆண்டுகால வரலாற்று பாரம்பரியங்களை கொண்ட ஒரு போட்டி தொடர், 
இது 1975ம் ஆண்டு இங்கிலாந்தில் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. அப்போது டெஸ்ட் அந்தஸ்துடைய அறு நாடுகளான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், இந்தியா மற்றும் நியூசிலாந்துடன் டெஸ்ட் அந்தஸ் அற்ற இலங்கை  அணியும் பங்கு பற்றி இருந்தது. 17 ஓட்டங்களால் ஆஸ்திரேலியா அணியை வெற்றி கொண்டு  மேற்கிந்திய தீவுகள் அணி கிண்ணத்தை தன்வசமாக்கியது, இந்த போட்டியானது அறுபது பந்து பரிமாற்றங்களை கொண்டமைந்ததுடன், வீரர்கள் பாரம்பரிய வெள்ளை கிரிக்கெட் சீருடையுடன் விளையாடி இருந்தனர். இங்கு சிவப்பு நிற தொட்பந்து பயன்படுத்தப்  பட்டிருந்தமை குறிப்பிடதக்க அம்சமாகும்.
இதேவேளை இரண்டாவது  உலக கின்ன போட்டி மற்றும் மூன்றாவது உலக கின்ன போட்டி என்பன முறையே 1979 மற்றும் 1983 ஆண்டுகளில்  மீண்டும் இங்கிலாந்தில் இடம் பெற்றிருந்தது.  இந்த போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்து அணியை 92 ஓட்டங்களால் தோற்கடித்து கிண்ணத்தை தனதாக்கியது.
மூன்றாவது  உலககின்ன போட்டியிலே அனைவரதும் எதிர் பார்ப்புக்களையும் சிதறடித்து இந்திய அணி மிகவும் சவால் நிறைந்த மேற்கிந்திய தீவுகள் அணியை வெற்றி கொண்டு கிண்ணத்தை தனதாக்கியது.
நான்காவது உலககின்ன போட்டியானது 1987 ம் ஆண்டு முதல் முறையாக இங்கிலாந்துக்கு வெளியே ஏற்பாடு செய்யப்பட்டது. இரு  ஆசிய நாடுகளான இந்திய மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இடம் பெற்றிருந்தது . இதில் முதல் முறையாக தற்கால கிரிக்கெட்டின் முடிசூடா மன்னர்களான ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியை தோற்கடித்து கிண்ணத்தை தனதாக்கியது . இதில் பந்து பரிமாற்றங்களின் எண்ணிக்கையானது 60பதில் இருந்து 50ஆக குறைக்கப்பட்டு அது நியமமாக பேணப்பட்டு வருகின்றது.
 
ஐந்தாவது உலக கின்ன போட்டியானது 1992 ம் ஆண்டு ஆஸ்ரேலிய மற்றும் நியூசிலாந்தில் இடம் பெற்றிருந்தது இதில் பாகிஸ்தான் அணி முதல் முறையாக இங்கிலாந்து அணியை 7 ஓட்டங்களால் வெற்றி கொண்டு கிண்ணத்தை வென்றது. இந்த போட்டிகளிலே வர்ண சீருடையுடன் வெள்ளை நிற தொல்பந்து அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆறாவது உலககின்ன போட்டிகள் 1996ம் ஆண்டு இந்தியாவில் ஏற்பாடாகி இருந்தது, இதில் முதல் சுற்று போட்டிகள் சில இலங்கையிலும் இடம் பெற்றிருந்தது. இந்த போட்டியிலே அர்ஜுன ரணதுங்க மற்றும் அரவிந்த டி சில்வ எனும் பெரும் தலைகளின் துணிச்சலான  வீறுமிக்க வழிகாட்டல்,   முரளிதரனின் சூழல், சமிந்த வாஸின் வேகம் மற்றும் அதிரடி நாயகன் சனத் ஜெயசூர்யாவின் சகலதுறை ஆட்டம் என்பன ஒருமித்து முழங்க முதல் முறையாக பல்வேறுபட்ட சவால்கள் மற்றும் பரபரப்புகளுக்கு மத்தியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இலங்கை அணி கிண்ணத்தை தன்வசமாக்கியது .
பதினாறு வருடங்களுக்கு பின் மீண்டும் ஏழாவது போட்டியானது  1999ம்  ஆண்டு இங்கிலாந்தில் ஏற்பாடானது. இதில் மிக இலகுவாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக ஆஸ்திரேலிய அணி கிண்ணத்தை தன்வசப்படுதியது .  இங்கு  ஆஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையிலான அரை இறுதி ஆட்டம் மிகவும் பரபரப்பையும்  சுவரசியத்தையும் ஏற்படுத்தி இருந்ததை கிரிக்கெட் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
எட்டாவது போட்டியானது 2003ம் ஆண்டு தென்னாபிரிக்க, சிம்பாவே மற்றும் கென்யா ஆகிய நாடுகளில் ஏற்பாடாகி இருந்தது.  இதிலே இலங்கை அணியை அரையிறுதியில் வெற்றி கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டியிலே ரிக்கி பொன்டிங்கின் அதிரடி நிறைந்த அசத்தலான ஆட்டத்தினால் இந்திய அணியை 154 ஓட்டங்களால் மண்கவ்வ செய்து  மூன்றாவது முறையாக வெற்றி வாகை சூடியது.  இதிலே பதின்நான்கு அணிகள் பங்கு பற்றி இருந்தமை சிறப்பம்சமாகும்.
2007ம் ஆண்டு ஒன்பதாவது உலககின்ன சமரானது மேற்கிந்திய தீவுகளிலே இடம் பெற்றிருத்தது . இதன் இறுதிப்போட்டியில் மழை போட்டியின் தீர்ப்பை நிர்ணயிக்கும் சக்தியாக உருவேடுத்திருக்க, டக்வத் லுவிஸ் முறைப்படி இலங்கை அணியை 56 ஓட்டங்களால் வெற்றி கொண்டு நான்காவது முறையாகவுமும் (தொடர்ந்து மூன்று முறை) கிண்ணத்தை தன்வசமாக்கியது பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி.



Friday, 17 December 2010

திசைமாறும் யாழ்ப்பாணம்

உலகிலே தமிழ் கலாச்சாரங்கள், தமிழ் பாரம்பரியங்கள்  மற்றும் இந்து  பண்பாட்டு விழுமியங்களை பறை சாற்றுகின்ற பிரதேசம் தான் யாழ் குடாநாடு. யாழ் குடா நாடானது பல வரலாற்று சுவடுகள் மற்றும் தனக்கென தனிதுவமிக்க வரலாற்று இலக்கியங்களை கொண்ட  ஒரு தனிப் பெரும் தமிழர்களின் தேசம். இது கல்வி மான்களையும் சகலகலா வித்தகர்களையும் உருவாக்குகின்ற ஒரு தேசம், அணைத்து சமூகங்களுக்கும் மத்தியில் இன்று தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்பதற்கு ஒரு அடித்தளமாகவும், பெண் இலக்கணத்திற்கு ஒரு முன்மாதிரியாக விளங்கும் தேசம் இது. 

ஆனால் தற்போது இருக்கூடிய கொலை , கொள்ளை , களவு, சூதாட்டம், அடாவடித்தனம், அட்டூழியம் அத்தனையும் நிறைத்து மலிந்து   காணப்படும் இடமாக உருவெடுத்து வருகின்றது. யாழ் குடாநாட்டிற்கான  A9 வீதி திறக்கப்படத்தை தொடர்த்து இவை அத்தனையும் அரங்கேறி வருகின்றன. 
A9 வீதி திறக்கப்பட முன்னர் யாழ் குடநாட்டிற்கு வரும் வெளிநபர்களின் எண்ணிக்கை மிக சொற்பமாகவே இருந்தது அதிலும் குறிப்பாக மேலைத்தேய கலச்சராத்தில் குடாநாட்டிற்குள் வரும்  கோப்பை கழுவிநிகளின் எண்ணிக்கை மிக மிக அரிதாகவே இருத்தது, அதனால் யாழ் மக்களது கலாச்சாரமோ வாழ்க்கை முறைமையோ மாறி இருக்கவில்லை, 

இதேவேளை மக்களது நிதிகள் அனைத்தும் வங்கிகளின் வைப்புகளை நோக்கி நகர்ந்திருந்தன இதனால் தேவையற்ற பொழுதுபோக்கு ஊடகங்கள் மற்றும் தொலைபேசி பாவை மட்டுப்படுதபட்ட அளவில் இருந்தது இதனால் யாழ் குடாநாட்டு மாணவர்களது சிந்தனை, செயல் அனைத்தும் கல்வியிலும், கல்விசார்  இணைப்பாடவிதான செயற்பாடுகளையும் நோக்கி நகர்ந்தன.

A9 வீதி திறக்கப்பட்டதன் பின்னர் இதுதான் தற்கால நாகரீகம் என்று பிதட்டிக் கொண்டு நாட்டுக்குள் வரும்  வெளிநாடு மோப்பநாய்களினாளும் (இந்நாட்டை சேர்ந்த கோப்பை கழுவிகள்)  யாழ்  நோக்கி படை எடுத்துள்ள நிறுவங்களின்  சந்தைப்படுத்தல் வெளியீடுகளாலும் பாரம்பரிய காலாசார விழுமியங்களும் , மக்களது வாழ்கை முறையையும் திசை மாறி செல்கின்றது. இதன்பிரதி பலிப்பு பாடசாலை மாணவர் முதல் பல்கலை கழக மாணவர்களில் இருந்து பெண்கள் வரை எவரையும் விட்டு வைக்கவில்லை.

 ஒரு ஆசிரியரை கண்டால் மாணவர்கள் பயந்த காலம் பொய் , மாணவர்களை கண்டால் ஆசிரியர் பயப்படும் நிலை உருவெடுத்துள்ளது, பாடசாலைகளிலே ஒழுக்க கட்டுப்பாடுகள் கட்டவுல்த்து விடப்பட்டிருக்கின்றது, இவை அனைத்திற்கும் "மது அருந்துவது தான் நாகரீகம்" என்ற கோப்பை கழுவிநிகளது நாகரிக வழிகாட்டலும் அதனுடன் கூடிய நாணய மாற்றமும்.

இதற்கு அப்பால் நாகரீக மது பிரியர்களிடம் மயங்கும் மாதுக்கள் இதன் விளைவு யாழ் போதன வைத்திய சாலையில் தெரிகிறது. இந்த கொடிய நாகரிக நோயின் நோக்கேல்லை பல்கலை கழக மாணவிகளிடம் இருந்து தற்போது பாடசாலை மாணவிகள் வரை பரந்திருப்பதை அண்மையில் வெளியான செய்திகள் உணர்த்து கின்றன. 

இவை எல்லாம் ஒரு புறம் இருக்க, மறு முனையிலே அதிகரிந்து வரும் வேலை வெட்டியில்லா இளம் சமுதாயங்களின் அடாவடித்தனமும் கொள்ளைகளும். வாள்கள் மற்றும் இதர கூரிய ஆயுதங்கள் மூலம் பொது மக்களை மிரட்டியும் கொலைசெய்தும் கொள்ளை கும்பல்கள்  தமது கைவரிசையை காட்டி வருகின்றனர்  , இது  தற்போது யாழ் குடா நாட்டை பெரும் பீதியில் ஆழ்த்தி இருக்கின்றது. ஆனால் கடமை உணர்ச்சி கூடிய காவல் துறையினரால் வீதிகளிலே  நின்று பிழை பிடித்து பணம் பறிப்பதை விட வேறு ஏது முடியும் அவர்களால். 

இந்நிலை தொடருமாயின் இன்னும் சில வருடங்களில் ஆசியாவின் அதிசயமாக மாற இருக்கும் யாழ்பாணம், சோமாலியாவாகதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை!





Wednesday, 15 December 2010

FACEBOOK ன் இணை ஸ்தாபகர் MARK ZUCKERBERG "TIME's 2010" ஆக தெரிவு

 FACEBOOKன் இணை ஸ்தாபகரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான Mark Zuckerberg  இவ்வாண்டிட்கன TIME சஞ்சிகையின் உடைய நபராக தெரிவு செய்யப் பட்டுள்ளார். (TIME's 2010 Person of the Year 2010)
2010ம் ஆண்டிற்கான பிரபல நபரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் விக்கிலீக்ஸின் ஜூலியன் அசேஞ்சே முதலில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்த நிலையிலேயே, அனைவரினது எதிர்ப்பார்ப்பினையும் முறியடித்து ஷூக்கர்பேர்க்கினை டைம் தெரிவு செய்துள்ளது என டைம் சஞ்சிகையினுடைய பிரதம ஆசிரியர் Rick Stengel இந்த அறிவித்தலை  இன்று (15.12.2010) வெளியிட்டுள்ளார். இத் தெரிவானது வெறும் வாக்குகளை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாது பல்வேறு விடயங்களை கருத்தில் கொண்டே மேற்கொள்ளப்படுகின்றது.
    26 வயதான  ஷூக்கர் பேர்க் உலகிலே அரை பில்லியன்க்கு மேற்பட்டோரை ஒரு சமுக வலையமைப்பின்  மூலம் ஒன்றினைதிருக்கின்ற பெருமைக் குரியவர். இந்த சமூக வலையமைப்பானது உலகிலே பல மாற்றங்களுக்கும் பல வலையமைப்பு விருத்திகளுக்கும் ஒரு அடித்தளமாக மாறி இருக்கின்றது , அதற்கு அப்பால் இது வர்த்தகதுறையிலே ஒரு ஊடகமாகவும், மக்களது சிந்தனையாற்றல்கள் மற்றும் வெளிப்பாடுகளை,   தகவல் புரட்சியூட அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி இட்டு செல்வதற்க்காண ஒரு தகவல் மையமாக அமைந்திருக்கின்றது.
இதற்கு முன்னர் 1952ம் ஆண்டு Elizabeth மகராணி மிக குறைந்த வயதில் (26 வயது ) இந்த விருதினை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சாமாகும்.

Sunday, 12 December 2010

Wikileaksம் அரங்கேறும் நாடகங்களும்

உலகிலே இடம் பெற்று வருகின்ற ஆராயகங்கள்  மற்றும் திரைக்கு பின்னான  இராயாங்க இரகசியங்களை தங்களது திறமையை பயன்படுத்தி வலையமைப்புகளை கொள்ளை இடுதல் மற்றும் இதர தகவல் கசிவுகள்   மூலம் உலகிற்கு எடுத்து வியம்புகின்ற இணைய தளம் தான் விக்கிலீக்ஸ்.(www.wikileaks.org) இவர்கள் 2006ம் ஆண்டு ஆப்கானிஷ்தானுக்கு எதிராக அமெரிக்க போர் தொடுத்ததன் பின்னணியில் தொடர்புபட்டிருக்கும் இருக்கும் ஆவணங்கள் முதல் அனைத்துலக நாடுகளில் இடம் பெற்றுக்கொண்டிருக்கும் திரைக்கு பின்னான அரசியலை எடுத்தியம்பி வருகின்றனர். இது இவ்வாறிருக்க சர்வதேச குற்ற புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வந்த Australia பிரயையான  அதன் நிறுவுனர் Michel Assange கடந்த 07 திகதி லண்டன்மா நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரின் கைதை தொடர்ந்து பல நாடகங்கள் அரங்கேறிய  வண்ணமுள்ளன  ஆறுமாதங்களுக்கு முன்னர் சீனா விக்கிலீக்ஸ்சை தடை செய்ததை தொடர்ந்து தற்போது விக்கிலீக்ஸ்ன் வெளிஜிடுகளால் பாதிப்புற்ற பல உலக வல்லரசுகளான அமெரிக்க, ஐக்கிய ராட்சியம், ஸ்வீடன் உட்பட இதர நாடுகள் அதனை தடை செய்தவண்ணமுள்ளன.
 "சோமியன் குடும்மி சும்மாவா ஆடும்", உலக வல்லரசுகளுக்கு வாழ் பிடிக்கும் நோக்கோடும் விக்கிலீக்ஸ் செயற்பாடுகளை ஸ்தம்பிதம்  அடைய செய்யும் பொருட்டும், விக்கிலீக்ஸ்ன் வங்கி கணக்கை பராமரித்து வந்த swesh bank அதன் கணக்குகளை மூடியதுடன் வங்கி நிலுவைளையும் முடக்கியது. 
விக்கிலீக்ஸ் ஆனது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு. இதன் செயற்பாடுகளுக்கு தேவையான நிதி மூலங்கள் அனைத்தும் நன்கொடை மூலம் பெறபட்டு வந்தன, இவை அனைத்தும் மேற்குறித்த வங்கி கணக்கு மூலமே பராமரிக்க பட்டுவந்தமை குறிப்பிடதக்கது .
 இதேவேளை ஒருந்தன் ஆடுற மாதிரி நாமளும் ஆடுவம், ஒருந்தன் எப்ப ஆடுவான் என்டு பாத்திட்டிருந்த கூட்டங்கள் சில தாமும் தங்கள் பங்கிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிந்தனையில், உலகில பிரபலமாக இருக்கின்ற தேடுதல் தளங்களான கூகிள் மற்றும் யாஹூ என்பன தங்களும் விக்கிலீக்ஸ்ன் தேடுதல் இணைப்புகளை தடை செய்தன. 
அது மட்டுமா ?  உலகில அதிகளவான தகவல்களை   சேமிக்க கூடிய வகையில் பல இயங்குதளங்களோடு இயங்கி கொண்டிருக்கும் இணையதள இட (hosting) வழங்குனரும் விக்கிலீக்ஸ் இணைய தளத்திற்கு இடமைப்பு வழங்கியதுமான  அமேசன் தான் வழங்கிய இட பரப்பை முட்டக்கி கொண்டது, விக்கிலீக்ஸ் தற்போது www.wikileaks.ch எனும் முகவரியில் இயங்கி கொண்டிருகின்றது .














இதன் பிரதிபலிப்பாக assange சகபாடிகள் ஆன்மாதேய (Anonymous) நபர்கள் என்ற பெயரில் தங்களது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். அந்த வருசையில் amezen.com  இணைய செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தும் வகையில் 3 மணி நேரம் அதனை ஆனாமதேய நபர்கள் தம் கட்டுப்பாட்டின் கீழ் முடக்கி வைத்திருந்தனர்.
இதேவேளை உலகின் ஆன்லைன் பணபரிமாற்ற தளங்களான paypal உள்ளிட்டவை விக்கிலீக்ஸ் உடனான கணக்குகளை செயல் இழக்க செய்துள்ளனர். மறு முனையிலே சமுக வலையமைப்புகலான facebook மற்றும் twitter என்பன இது தொடர்பாக தாம் எந்த ஒரு முடிவும் இதுவரை எடுக்க வில்லை என தமது செய்தி குறிப்புகளில் வெளியிட்டுள்ளன, இவை அத்தனையும் உலக வல்லரசுகளின் வழிகாட்டல் அரங்கமே !
  Assange ஆள் வெளியிடும் நோக்கோடு வைத்திருக்கப் பட்டிருந்த முக்கியமான பல தகவல் கோவைகள் இணையதளங்களிலே தனிப்பட்ட பாதுகாப்பு குறியீட்டுடன் (Private Key) பதிவேற்றப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்பவர்  தனது  மினஞ்சல் முகவரியை பதிவதன் ஊடக தனிப்பட்ட கு
றியீட்டினால் பிரிக்கப்படாத கோவையாக தரவிறக்கம் செய்ய முடியும் அனால் ஆனாமதேய நபர்கள் தனிப்பட்ட குறியீட்டினை வெளியிடும் வரை எவரும் அதன் உள்ளடக்கங்களை பார்வையிட முடியாது. 
"வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்" என்பதற்கமைய Assange விடுவிக்காத பட்சத்தில் அண்ணாமதேய நபர்கள் தாம் இந்த தனிப்பட்ட இரகசிய குரியீட்டினை பதிவு செய்யப்பட்ட மினஞ்சல்களுக்கு வெளியிடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்!
எது எவ்வாறிருப்பினும் பதிவேற்றப்பட்டுள்ள தனிப்பட்ட இரகசிய குறியீட்டுடன் கூடிய கோவைகள் பிரித்தெடுக்கும் முயற்சியில் மென்பொருள் பொறியியல் ஆளர்கள் மற்றும் தகவல் தொழில் நுட்ப விற்பனர்கள் இறங்கி இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை!


நிருவின் - நிஜங்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...